சென்னை மாநகராட்சி நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
முதல்வர் பழனிசாமியின் ஆணைப்படி சென்னை மாநகராட்சியில் கடந்த 19-ம் தேதி முதல் நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு உத்தரவு ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஜூலை 5-ம் தேதிக்குப் பிறகு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த தளர்த்தப்பட்ட ஊரடங்கு முறை பின்பற்றப்படும். புதிதாக தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.
எனினும் ஜூலை 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல் செய்யப்படும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.
இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.