ஆக. 23 முதல் பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 23-ம் தேதி காலை 11 மணி முதல் ஆக. 31 -ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களின் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவை அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அரசுத் தேர்வுத் துறையின் மூலம் ஆக.21 காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மாணவர்கள் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார்.