தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்து கோயில்களில் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யும் வசதியை ஏற்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.
இதன்படி வடபழனி முருகன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவர், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உள்ளிட்ட 20 கோயில்களில் பக்தர்கள் இலவச, கட்டண தரிசனத்துக்கு ஆன்லைன் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்த மற்ற கோயில்களுக்கும் ஆன்லைன் தரிசன வசதி நீட்டிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.