ஏசி பஸ்களின் சேவை 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஏசி பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து கடந்த மாதம் முதல் ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் ஏசி பஸ்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர். அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 700 ஏசி பஸ்கள் உள்ளன. இதில் இப்போது 400 ஏசி பஸ்களை இயக்கி வருகிறோம். பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் ஏசி பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.