மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்பணம் வழங்கும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் முன்பணம் வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியத்தில் ரூ.10,000 முன்பணமாக வழங்கப்படும். இந்த முன்பணம் 10 தவணைகளில் வசூலிக்கப்படும்.
இதன்மூலமாக மத்திய அரசுக்கு ரூ.4,000 கோடி வரை செலவு ஏற்படும். மாநில அரசுகளும் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.