3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுவருகிறது. நடப்பு 2020-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
முதல் நாளில் மருத்துவக்கான நோபல் பரிசு அரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்ட் ஜென்செல், அண்ட்ரியா கெஸ் ஆகிய மூவருக்கும் இயற்பியலுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
கருந்துளை குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.