ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலால் தொழில் நிறுவனங்கள் முடங்கி, ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்ததால், அதனை கருத்தில் கொண்டு கடன் தவணைகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 6 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், இந்த 6 மாத காலத்துக்கு அரசு, தனியார் வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தன.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.