விபத்தில் இறந்த வங்கி ஊழியர் குடும்பத்துக்கு ரூ.54 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் லட்சுமி. வங்கி ஊழியரான இவர் கடந்த 2016 டிசம்பரில் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் நடந்து சென்றபோது பைக் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கை சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி ரேவதி விசாரித்தார்.
“லட்சுமியின் உயிரிழப்புக்கு பைக்கை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. லட்சுமியின் கணவர் சந்திரசேகருக்கு ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.53.82 லட்சத்தை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்” என்று நீதிபதி ரேவதி உத்தரவிட்டார்.