இந்தியாவில் 46,253 பேர்.. தமிழகத்தில் 2,487 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 46,253 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83,13,876 ஆக உயர்ந்துள்ளது. இதில் 76,56,478 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா தொற்றைவிட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவமனைகளில் தற்போது 5,33,787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 514 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,23,611 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 4,909 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,92,693 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,31,277 பேர் குணமடைந்துள்ளனர். 1,17,168 பேர் சிகிச்சையில் உள்ளனர். 44,248 பேர் உயிரிழந்துள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 2,756 பேரக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,32,396 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,80,735 பேர் குணமடைந்துள்ளனர். 40,414 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11,247 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 2,849 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,30,731 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,02,325 பேர் குணமடைந்துள்ளனர். 21,672 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,734 பேர் உயிரிழந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,34,429 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7,04,31 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 19,154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று 30 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,244 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 657 பேர், கோவையில் 220 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் புதிதாக 1,726 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,87,335 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,57,708 பேர் குணமடைந்துள்ளனர். 22,538 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,089 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் நேற்று 8,516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 4,59,646 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,72,951 பேர் குணமடைந்துள்ளனர். 84,995 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,587 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் புதிதாக 6,725 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,03,096 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,60,069 பேர் குணமடைந்துள்ளனர். 36,375 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,652 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. எனினும் கேரளா, டெல்லியில் மட்டும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.