கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பகுதிகளை தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு IPS ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பூதப்பாண்டி, இரணியல், குளச்சல், முஞ்சிறை, நித்திரவிளை, அஞ்சுகிராமம்,சுசீந்திரம், திருப்பதிசாரம்,தோவாளை என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் குமரி மாவட்ட காவலர்களை சந்தித்து மீட்பு பணிகளை குறித்த கேட்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.