தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்கு இந்து காந்த காஷாயம் உள்ளிட்ட ஆயுர்வேத மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் வாயிலாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“முதல்வரின் உத்தரவின் பேரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளான இந்து காந்தகஷாயம், அகஸ்திய ரசாயனம், கூஷ்மாண்ட ரசாயனம் மருந்துகளை வழங்க டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த ஆயுர்வேத மருந்துகளை அரசு சிகிச்சை மையங்களில் பொதுமக்கள் கட்டணமின்றி (இலவசமாக) பெற்றுக் கொள்ளலாம்.
காலை, இரவு என இருவேளை இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.