ரேஷனில் கொண்டை கடலை விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.
அரிசி பிரிவில் உள்ள முன்னுரிமை, அந்தியோதயா பிரிவு ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதன்கிழமை முதல் 5 கிலோ கொண்டை கடலை இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னுரிமையற்ற கார்டுதாரருக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு இலவசமாக அளிக்கப்படுகிறது.
கைரேகை பதிவுக்கு பதிலாக இம்மாதமும் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கப்படும் என்று உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.