சனியும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.
இதன் காரணமாக அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. குறிப்பாக மார்ச் இறுதி, ஏப்ரல் மாதங்களில் அரசு அலுவலகங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன.
மே மாதம் குறைந்த ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டன.
கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஊழியரும் வாரத்துக்கு 4 நாட்கள் பணியாற்றினர்.
இந்த சூழ்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
கொரோனா ஊரடங்கால் தேங்கியுள்ள பணிகளை விரைந்து முடிக்க சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும். இந்த நடைமுறை டிசம்பர் வரை நீடிக்கும் என்று தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலக சங்கம் உட்பட பல்வேறு ஊழியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.