விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கலாம் என்று தமிழக அரசின் தொடக்க கல்வித் துறை அறிவித்துள்ளது.
“விஜயதசமி அன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதன்முதலாக பள்ளிகளில் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அக். 26-ம் தேதி விஜயதசமி அன்று மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தலாம்.
இதுதொடர்பாக ஊர் பொது இடங்களில் பதாகைகளை அமைக்கலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 5 வயதுடைய குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்றைய தினமே குழந்தைகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும்” என்று தமிழக அரசின் தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.