தமிழகத்தில் நாளையும் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இதன்காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்தது. தமிழகம், புதுச்சேரியில் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.