சென்னை ஐகோர்ட்டில் புதிதாக 10 நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்.
சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 10 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்த் சுப்பிரமணியன், கண்மம்மாள் சண்முகசுந்தரம், சாத்தி குமார், முரளி சங்கர் குப்புராஜு, மஞ்சுளா ராஜராஜு நல்லய்யா, தமிழ்செல்வி ஆகியோர் ஐகோர்ட் நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர்.
அவர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் ஐகோர்ட் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.