கோயம்பேடு மார்க்கெட் நவ. 20-ல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கிருமி நாசினி தெளிக்கவும் மார்க்கெட்டை சுத்தம் செய்யவும் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டு வந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று மார்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நவ. 20-ம் தேதி வெள்ளிக்கிழமை கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல செயல்படும் என்று கோயம்பேடு மார்க்கெட் காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.