உயிர்வாழ் சான்றிதழ் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
“ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு நேரடியாக வந்து உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சேமிப்பு கணக்கின் கடைசி எண் 1, 2 உள்ள வாடிக்கையாளர்கள் திங்கள்கிழமை, 2, 4-ம் எண் உள்ளவர்கள் செவ்வாய், 5, 6-ம் எண் உள்ளவர்கள் புதன்கிழமை, 7,8-ம் எண் உள்ளவர்கள் வியாழக்கிழமை, 9,0-ம் எண் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமையும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். சனிக்கிழமைகளில் அனைத்து வாடிக்கையாளர்களும் உயிர்வாழ் சான்றிதழை அளிக்கலாம்.
அதேநேரம் மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்துக்குப் பதிலாக வேறு நாளில் வந்தால் அவர்களை திருப்பி அனுப்பக்கூடாது. மூத்த குடிமக்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கிக்கு வரலாம்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.