அரசு பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் நீட் நேரடி பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கடந்த 2017 முதல் நீட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இணைய வழியில் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. வரும் மே மாதம் மாணவ, மாணவியருக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.