அரசு பள்ளி முன்னாள் மாணவருக்கும் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நீட் தேர்வில் தொடர்ச்சியாக பயிற்சி பெற்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர். இதன்காரணமாக ஏற்கெனவே பயிற்சி பெற்ற அரசு பள்ளி முன்னாள் மாணவ, மாணவியருக்கும் மீண்டும் நீட் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்யலாம். அவர்களுக்கு நீட் தேர்வுக்கு முந்தைய வாரம் வரை இணைய வழியில் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு வார இறுதியிலும் குறுந்தேர்வு நடத்தப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.