கடன் தவணை நீட்டிக்கப்படாது என்று சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் செய்யப்பட்டதால் நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பல லட்சம் பேர் வேலையிழந்தனர்.
இதை கருத்தில் கொண்டு வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கு தவணை செலுத்த 6 மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
கடன் தவணை காலஅவகாசத்தை நீட்டிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரிசர்வ் வங்கி பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், கடன் தவணையை 6 மாதங்களுக்கு மேல் நீட்டிக்க வாய்ப்பே இல்லை. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏற்கெனவே பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு மேல் சலுகை வழங்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.