அக். 31 வரை புறநகர் மின்சார ரயில் சேவை தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்களுக்கான தடை அக்டோபர் 31-ம் தேதி வரை தொடரும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர இதர சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும். இதேபோல அக். 31 வரை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடையும் நீடிக்கும்.
மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை அக். 31 வரை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.