தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளின் பொது இடங்களில் 15 சதவீதமும், மேற்படிப்புகளில் 50 சதவீதமும் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இந்த அகில இந்திய ஓதுக்கீட்டில் ஓபிசிக்கான (இதர பிற்படுத்தப்பட்டோர்) இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினர்.
தலைமை நீதிபதி கூறுகையில், மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை. இதுதொடர்பாக மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும என்று தீர்ப்பளித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.