திண்டுக்கல் தேனி மாவட்ட காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும், காவலர்கள் பொதுமக்களுடன் கனிவாக நடந்து கொள்ளவும் இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் டிஐஜி முத்துச்சாமி கூறுகையில், “தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால் காவலர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மூச்சுப் பயிற்சி அவசியம்.
இதன் மூலம் நுரையீரலை பாதுகாத்து , கொரோனா வராமல் பாதுகாத்துக் கொள்ள யோகா பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். திண்டுக்கல் தேனி மாவட்ட காவலர்கள் பொதுமக்களுடன் நல்லுணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.