ரேஷன் டோக்கன்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் டோக்கன் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி நவம்பர் மாதத்துக்கான ரேஷன் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அக். 27 முதல் 29-ம் தேதி வரை வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
டோக்கன்களில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க செல்ல வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.