சென்னை மாநகராட்சி பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பஸ் நிழற்குடைகள், பாலங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் 20,000 சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி பகுதிகள் முழுவதும் சுவரொட்டிகளை அகற்றும் பணி தொடரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.