தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 16-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11, 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை வரும் 16-ம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர பள்ளி, கல்லூரி விடுதிகள் வரும் 16-ம் தேதி முதல் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பள்ளி, கல்லூரிகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.