பள்ளி பாடத்திட்டத்தை 50% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தி வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் பள்ளி பாடத்திட்டத்தை 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.