வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் ஜோதி நிர்மலா அண்மையில் கோவை, சேலம் மண்டலங்களில் அண்மையில் ஆய்வு செய்தார். அப்போது சார் பதிவாளர்கள் உயர்ந்த மேடையில் அமர்ந்து பணி செய்வதால் பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்கு பதிவு சேவையினை வழங்குவது சிரமமாக இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே இனி வரும் காலங்களில் சார் பதிவாளர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவு பணியினை மேற்கொள்ள வேண்டும். சார்பதிவாளர்கள் அமர்ந்துள்ள மேடையினை சுற்றியுள்ள தடுப்பினை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.