தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வடதமிழகம், கோவை
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக வடதமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடனும் நகரில் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.