பல்வேறு மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாக விரிவாக்கவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தவும் தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதுதொடர்பான அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர், பொன்னேரி பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 19 நகராட்சிகளை தரம் உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.