தமிழகத்தில் புதிய பணி நியமனத்துக்கு தடை நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதன்காரணமாக தமிழக அரசின் வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க அரசின் செலவினங்கள் குறைக்கப்பட்டன. சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய பணியிடங்களை உருவாக்க கடந்த செப்டம்பர் 21-ம் தேதி தடை விதிக்கப்பட்டது.
தற்போது புதிய பணி நியமனத்துக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்ப நிலை பணியாளர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.