அமெரிக்காவின் எப் 1, எம் 1 விசாக்களை பெற்று வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் அந்த நாட்டில் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைனில் பாடம் நடத்தி வருகின்றன.
இவ்வாறு ஆன்லைன் கல்வி திட்டத்தில் இணைந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக விசா நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டன.
இந்த விசா உத்தரவை எதிர்த்து 17 மாகாண அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சார்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் அரது தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.